Advertisement

டெல்லியில் ஒரே நாளில் மேலும் 3,299 பேருக்கு கொரோனா

By: Nagaraj Mon, 19 Oct 2020 4:02:01 PM

டெல்லியில் ஒரே நாளில் மேலும் 3,299 பேருக்கு கொரோனா

டெல்லியில் ஒரே நாளில் மேலும் 3,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

டெல்லியில் மேலும் 3,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,31,017 ஆக உயர்ந்துள்ளது.

delhi,corona,affected,treated,healed ,டெல்லி, கொரோனா, பாதிப்பு, சிகிச்சை, குணமடைந்தனர்

மாநிலத்தில் ஒரேநாளில் 28 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் 2,863 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,01,716 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் தற்போது 23,292 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|