Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து 14 பேர் சம்பவ இடத்திலேயே பலி

மெக்சிகோவில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து 14 பேர் சம்பவ இடத்திலேயே பலி

By: Karunakaran Wed, 18 Nov 2020 1:47:06 PM

மெக்சிகோவில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து 14 பேர் சம்பவ இடத்திலேயே பலி

மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள நயாரித் மாகாணத்தில் இருக்கும் ஒரு நெடுஞ்சாலையில் திரவமாக்கப்பட்ட சமையல் கியாசை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி சாலையில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது டேங்கர் லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடிய அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த சில வாகனங்களை மோதி விட்டு சாலையில் கவிழ்ந்தது. இதில் டேங்கரில் இருந்த திரவ கியாஸ் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது.

gas tanker,truck explodes,mexico,14 death ,எரிவாயு டேங்கர், டிரக் வெடித்தது, மெக்சிகோ, 14 மரணம்

அதன் பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது
இதில் சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் சிக்கி தீக்கிரையாகின. இந்த கோர விபத்தில் டேங்கர் லாரியின் டிரைவர் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags :
|