Advertisement

இரும்பிலான ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியது

By: Nagaraj Sat, 10 Dec 2022 10:03:09 PM

இரும்பிலான ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியது

எண்ணூர்: ராமகிருஷ்ணா நகர் கடற்கரை அருகே இரும்பிலான ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியது.

மாண்டஸ் புயல் காரணமாக எண்ணூர் பகுதியில் நேற்று முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடலில் கிடந்த சிறிய அளவிலான கற்கள் மரங்களை சாலையில் தூக்கி வீசியது. இந்த நிலையில் ராமகிருஷ்ணா நகர் கடற்கரை அருகே இரும்பிலான ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியது.

 ennore,iron,ship,officers,ship ,இரும்பு, எண்ணூர், கப்பல் , அதிகாரிகள், கப்பல்

இது ராட்சத கேஸ் சிலிண்டர் போன்று காட்சியளித்ததால் பொதுமக்கள் பயந்து போய் எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு எண்ணூர் போலீசார் விரைந்து வந்து அந்த மிதவையை ஆய்வு செய்தனர்.

அப்போது, கப்பல்களின் ராட்சத இரும்பு சங்கிலி மூலம் நங்கூரத்தில் கட்டப்பட்டு கடலில் மிதக்கும் மிதவை என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

Tags :
|
|