Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை நடக்கிறது பிரமாண்ட விழா... திரிபுரா முதல்வராக பதவியேற்கிறார் மாணிக் சகா

நாளை நடக்கிறது பிரமாண்ட விழா... திரிபுரா முதல்வராக பதவியேற்கிறார் மாணிக் சகா

By: Nagaraj Tue, 07 Mar 2023 09:56:30 AM

நாளை நடக்கிறது பிரமாண்ட விழா... திரிபுரா முதல்வராக பதவியேற்கிறார் மாணிக் சகா

அகர்தலா: திரிபுராவின் முதல்வராக மாணிக் சகா நாளை அகர்தலாவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பதவியேற்கிறார்.60 இடங்களை கொண்ட திரிபுரா சட்டசபைக்கு கடந்த மாதம் 16ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஆளும் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரிபுரா முதல்வராக இருந்த பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான மாணிக் சகா மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதில் திடீர் குழப்பம் ஏற்பட்டது.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் ஒரு தரப்பினர் மத்திய பெண் மந்திரி பிரதிமா பவுமிக்கை புதிய முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் குரல் எழுப்பியதால் இந்த குழப்பம் உருவானது.

appointment,chief minister,manik sakha,selection , தேர்வு, பதவியேற்பு, மாணிக் சகா, முதல்-மந்திரி

இதையடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, நேற்று திரிபுரா விரைந்தார். எம்.எல்.ஏ.க்களிடம் பேசி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் நேற்று மாலை திரிபுரா தலைநகர் அகர்தலாவில் பா.ஜ.க. எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. புதிய முதல்வராக மாணிக் சகாவை தேர்வு செய்ய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. திரிபுராவின் முதல்வராக மாணிக் சகா நாளை அகர்தலாவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பதவியேற்கிறார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :