இந்த மாவட்டத்தில் வரும் 18ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
By: vaithegi Wed, 16 Nov 2022 3:20:29 PM
சென்னை: மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் .... தமிழகத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து அவ்வபோது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி கொண்டு வருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.
மற்ற நிறுவனங்களை தொடர்ந்து இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாட்டா எலக்ட்ரானிக்ஸ் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ளது.இந்த நிறுவனம் அனைத்து மாவட்ட பெண்களுக்கும் வாய்ப்பளிக்க மாவட்டங்கள் தோறும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி கொண்டு வருகிறது.
அந்த வகையில் வரும் 18ம் தேதி (வெள்ளிக்கிழமை) திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமானது திண்டுக்கல் மாவட்ட GDN கலை கல்லூரியில் நடைபெறவுள்ளது .
இதில் 12ம் வகுப்பு முடித்த 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்பவர்களில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிறகு நிறுவனம் சார்பாக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியினை சிறப்பாக முடித்தவர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்படும்.