Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 340 ரூபாய்க்கு விற்பனை

இலங்கையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 340 ரூபாய்க்கு விற்பனை

By: vaithegi Mon, 22 Aug 2022 6:31:55 PM

இலங்கையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 340 ரூபாய்க்கு விற்பனை

இலங்கை: இலங்கையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 340 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதை அடுத்து அந்த நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் உட்பட அனைத்து எரிபொருள்களின் விலை விண்ணை முட்டிம் அளவுக்கு உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென மீண்டும் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டது. எனவே இதனை அடுத்து ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

kerosene,sri lanka ,மண்ணெண்ணெய் ,இலங்கை

மண்ணெண்ணெய் மானிய விலையில் தொடர்ந்து வழங்கி வருவதால் இலங்கை பெட்ரோல் கார்ப்பரேஷனுக்கு அதிக அளவு இழப்பு ஏற்பட்டதாகவும் இதை தவிர்க்க லிட்டருக்கு 250 ரூபாய் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் கூறப்பட்டது

எனவே இதனால் 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் திடீரென 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :