Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது ..இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது ..இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

By: vaithegi Tue, 12 Sept 2023 4:14:47 PM

அடுத்த 24 மணி நேரத்தில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகிறது ..இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனை அடுத்து நாளை முதல் வருகிற 18.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

india meteorological department,low pressure area ,இந்திய வானிலை ஆய்வு மையம்,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி


இந்த நிலையில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

அது மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில்,தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.a

Tags :