Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

By: vaithegi Sat, 25 Nov 2023 11:10:57 AM

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது


சென்னை :தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதையடுத்து இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

low pressure area,southeast bay of bengal ,காற்றழுத்த தாழ்வுப் பகுதி ,தென்கிழக்கு வங்கக்கடல்


இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 27ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளத

இதையடுத்து இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :