- வீடு›
- செய்திகள்›
- போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்
By: vaithegi Mon, 10 Oct 2022 2:36:11 PM
சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை .... தமிழகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது.
இதனை அடுத்து இந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது, அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் போதைப்பொருள் கடத்துபவர்கள் மீது தக்க கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தமிழக டி.ஜி.பி, உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.