ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் 12:38 மணியளவில் லேசான நிலநடுக்கம்
By: vaithegi Fri, 05 Aug 2022 06:40:47 AM
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் ஃபைசாபாத் நகரில் நள்ளிரவு சுமார் 12:38 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.9 ஆக பதிவாகி உள்ளது.
இதை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் 93 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இன்னும் உடனடியாக வெளிவரவில்லை.
மேலும் அந்நாட்டில் கடந்த ஜூன் இறுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு குறைந்தது ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1,500க்கும் கூடுதலானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :