திருப்பதி கோயிலுக்கு ரூ.1.2 கோடி நன்கொடை வழங்கிய இஸ்லாமிய தம்பதி
By: Nagaraj Wed, 21 Sept 2022 10:38:11 AM
திருமலை: சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதியான சுபினாபானு மற்றும் அப்துல்கனி ஆகியோர் திருப்பதி கோயிலுக்கு ரூ1.2 கோடி நன்கொடையாக வழங்கினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, நேற்று சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதியான சுபினாபானு மற்றும் அப்துல்கனி ஆகியோர் ரூ1.2 கோடி நன்கொடையாக வழங்கினர்.
இந்த
நன்கொடை காசோலையை ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் செயல்
அதிகாரி தர்மாவிடம் வழங்கினர். இதில், எஸ்.வி.அன்னப்பிரசாதம்
அறக்கட்டளைக்கு ரூ15 லட்சமும், திருமலையில் சமீபத்தில் நவீனப்படுத்தப்பட்ட
பத்மாவதி ஓய்வறையில் ரூ87 லட்சத்தில் புதிய மரச்சாமான்கள் மற்றும் சமையல்
பாத்திரங்கள் வழங்கினர்.