Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காரில் இருந்து கரன்சி நோட்டுகளை சாலையில் வீசியெறிந்த மர்மநபர்

காரில் இருந்து கரன்சி நோட்டுகளை சாலையில் வீசியெறிந்த மர்மநபர்

By: Nagaraj Sat, 15 Apr 2023 6:22:04 PM

காரில் இருந்து கரன்சி நோட்டுகளை சாலையில் வீசியெறிந்த மர்மநபர்

ஹரியானா: யார் அந்த மர்ம நபர்...சினிமா காட்சி பாணியில் ஒரு நபர் தனது காரில் இருந்து கரன்சி நோட்டுகளை சாலையில் வீசி எறிந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விநோதமான செயல்களில் ஈடுபட்டு திடீரென பரபரப்பை கிளப்புவதை சிலர் வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் ஒரு நபர் சினிமா காட்சியை உண்மையாக செய்து காட்டி தற்போது காவல்துறை கண்காணிப்பு வலையத்தில் சிக்கியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் பிரபலமான வெப் சீரிஸ் ‘பார்சி’ வெளியானது. இந்த வெப் சீரிஸில் பணத்தை சாலையில் வீசும் காட்சி வரும். ஹரியானாவில் நபர் ஒருவர் இந்தக் காட்சியை மீண்டும் உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

car,notes,person,road,rupees , கார், சாலை, நபர், நோட்டுகள், ரூபாய்

ஹரியானாவில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் சாலையில் முகமூடி அணிந்திருந்த வெள்ளை நிற காரில் வந்த ஒருவர் காரின் பின்புறம் கரன்சி நோட்டுகளை வீசினார்.

இந்த காட்சி வீடியோ பதிவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காரின் பதிவு எண் தெளிவாக தெரிகிறது. இந்த போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில், காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து குருகிராம் ஏசிபி விகாஸ் கௌசிக் கூறுகையில், “இந்த சம்பவம் சமூக வலைதளங்கள் மூலம் போலீசாரின் கவனத்துக்கு வந்தது. சினிமா காட்சியை நேரில் காண்பிக்கும் நோக்கத்தில் கோல்ஃப் கோர்ஸ் சாலை பகுதியில் 2 பேர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது, பொது இடத்தில் அத்துமீறி நுழைந்ததாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளோம்” என்றார்.

Tags :
|
|
|
|