இந்தியாவை சேர்ந்தவர் நியூசிலாந்து அமைச்சர் ஆனார்
By: Nagaraj Mon, 02 Nov 2020 9:59:13 PM
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமைச்சரானார்... நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.
நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக 5 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் இந்திய வம்சாவளி பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன், 41. இவர் இந்தியாவில் பிறந்து சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர். பின்னர் மேல் படிப்பை நியூசிலாந்து நாட்டில் முடித்தார்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் அமைச்சரவையில் இவர் சமூக நலம், இளைஞர்
நலம் மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 2006-ல் இவர்
நியூசிலாந்து தொழிலாளர் கட்சியில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். 2014ல்
நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு
தோல்வியுற்றார்.
2017-ல் எம்பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்,
2019-ல் பிரியங்கா ராதாகிருஷ்ணன் இன விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தனிச்
செயலாளராக நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில்
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்பது இதுவே முதல்
முறையாகும்.