Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் பணிக்கு வரும் செவிலியர்

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் பணிக்கு வரும் செவிலியர்

By: Nagaraj Tue, 12 May 2020 11:35:55 PM

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் பணிக்கு வரும் செவிலியர்

கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் பணியை தொடரும் செவிலியர்... கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றும் ரூபா பர்வீன் ராவ் தான் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் பணியை தொடர்கிறார்.

கஜனுரு கிராமத்தினைச் சேர்ந்த இவர் ஜெயசமராஜேந்திர அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தினமும் அவர் கிராமத்தில் இருந்து தீர்த்தஹள்ளி தாலுகாவிலுள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பணியாற்றி வருகிறார்இது குறித்து ரூபா கூறுகையில், ' இந்த மருத்துவமனையைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.

incomplete pregnant,nurse rupa,serves,medical service ,நிறைமாத கர்ப்பிணி, செவிலியர் ரூபா, பணியாற்றுகிறார், மருத்துவசேவை

அவர்களுக்கு எங்கள் சேவை தேவைப்படுகிறது. என்னுடன் பணியாற்றுபவர்கள் என்னை விடுப்பு எடுத்துக் கொள்ள வலியுறுத்தினர். ஆனால், மக்களுக்கு சேவையாற்றவே விரும்புகிறேன். தினமும் 6 மணி நேரம் பணியாற்றுகிறேன்.'மேலும், கர்நாடக முதல்வர் என்னை போனில் தொடர்பு கொண்டு நான் செய்யும் சேவைக்காக பாராட்டினார். நான் விடுமுறை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினார்' இவ்வாறு ரூபா பர்வீன் கூறினார்.

தன் இன்னுயிரை பணயம் வைத்து, 9 மாத கர்ப்பிணியாக இருந்த போதும் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள செவிலியர் ரூபாவை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags :
|