Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாரிசிலிருந்து மும்பைக்கு பார்சலில் வந்த போதைப்பொருள் சிக்கியது

பாரிசிலிருந்து மும்பைக்கு பார்சலில் வந்த போதைப்பொருள் சிக்கியது

By: Nagaraj Mon, 24 Oct 2022 5:04:54 PM

பாரிசிலிருந்து மும்பைக்கு பார்சலில் வந்த போதைப்பொருள் சிக்கியது

மும்பை: பாரிஸில் இருந்து மும்பையின் புறநகர் பகுதியான நலசோபராவில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட பார்சலில் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கூரியர் பார்சல் மூலம் இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை ரகசிய தகவலையடுத்து, மும்பை சரக்கு விமான நிலைய வளாகத்தில் இருந்து பார்சலை மும்பை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

பாரிஸில் இருந்து மும்பையின் புறநகர் பகுதியான நலசோபராவில் உள்ள முகவரிக்கு பார்சல் அனுப்பப்பட்டது. பார்சலை முழுமையாக ஆய்வு செய்ததில் சட்டவிரோதமான சர்வதேச சந்தையில் ரூ. 15 கோடிக்கும் அதிகமான பெறுமதியான மாத்திரை வடிவில் இருந்து 1.9 கிலோ ஆம்பெடமைன் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

intelligence,mumbai,officials intercepted,revenue ,இந்தியாவிற்கு, கூரியர் பார்சல், சர்வதேச, போதைப்பொருள்

பார்சல் டெலிவரி செய்யப்பட்ட போது, பார்சலை பெற்ற நபர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையில் இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டார்.

இரண்டாவது நபரிடம் விசாரணை நடத்தியதில், கடைசியாக பார்சலை பெற வந்த நைஜீரியரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை நைஜீரிய பிரஜை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|