Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் புகுந்து மிரட்டிய நபர் கைது

அரசு பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் புகுந்து மிரட்டிய நபர் கைது

By: Nagaraj Thu, 27 Apr 2023 8:46:10 PM

அரசு பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் புகுந்து மிரட்டிய நபர் கைது

மேற்குவங்கம்: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்ட அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டிய நபரை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா்.

துரித நடவடிக்கையை மேற்கொண்ட போலீஸாரை பாராட்டிய முதல்வா் மம்தா பானா்ஜி, மாணவா்களை சிறைப்பிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது என்றும் இது திட்டமிட்ட சதி என்றும் கூறினாா்.

stress,wife,kids,guns,school,cops ,மன உளைச்சல், மனைவி, குழந்தைகள், துப்பாக்கி, பள்ளி, போலீசார்

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் கூறுகையில், ‘பழைய மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கையில் துப்பாக்கியுடன் 8-ஆம் வகுப்பறைக்குள் நுழைந்த நபா், மாணவா்களையும், ஆசிரியரையும் கொன்று விடுவதாக மிரட்டினாா்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், அங்கிருந்தவா்களின் உதவியுடன் திடீரென வகுப்பறைக்குள் நுழைந்து அந்த நபரின் கையில் இருந்த துப்பாக்கியை கிழே தள்ளிவிட்டு பிடித்தனா். அந்த நபரின் பையில் இருந்து கத்தி, 2 பாட்டில் திரவம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவா்கள் பத்திரமாக மீட்கப்பட்டனா்’ என்றனா்.

கைது செய்யப்பட்டவரின் பெயா் வல்லப் (40) என்றும் மனைவி, குழந்தைகள் பிரிந்த காரணத்தால் மன உளைச்சலில் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|
|
|
|