- வீடு›
- செய்திகள்›
- தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
By: vaithegi Sun, 18 Sept 2022 4:13:59 PM
தைவான் : தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6. அலகாக பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் மிக கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை.
இதனை அடுத்து இந்த நிலையில், தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைடுங் நகருக்கு வடக்கே 50 கி.மீ தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியால் தைவான் அருகே உள்ள தொலைதூர தீவுகளுக்கு ஜப்பான் வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இன்று மாலை 4 மணியளவில் ஒரு மீட்டர் உயர அலைகள் எழும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலநடுக்கம், புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் ஆகிய கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் தெளிவாக உணரப்பட்டது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.