மாணவர்களை நல்வழிப்படுத்தும் திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது
By: vaithegi Tue, 13 Sept 2022 4:36:16 PM
சென்னை: பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த ‘சிற்பி’ எனும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதை அடுத்து இந்த திட்டத்தை செப்டம்பர் 14ம் தேதி அன்று காலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்வில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைக்கவுள்ளார்.
இந்த சிற்பி திட்டமானது காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் சென்னை பெருநகர காவல் மூலமாக திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும் ‘சிற்பி’ திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு சீருடைகளும் வழங்கப்படவுள்ளது. தற்போது தமிழக பள்ளிகளில் இருக்கும் தேசிய மாணவர் படை திட்டம் போல இந்த திட்டமும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்த திட்டம் மாணவர்களை சமூக பொறுப்புள்ளவர்களாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சிற்பி திட்டம் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் மிக நல்லதொரு வரவேற்பையும் பெற்றுள்ளது.