Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாலைப்பணி நடக்கும் இடத்தில் இருந்து வெளியேறிய அரிய வகை வெள்ளைப்பாம்பு

சாலைப்பணி நடக்கும் இடத்தில் இருந்து வெளியேறிய அரிய வகை வெள்ளைப்பாம்பு

By: Nagaraj Mon, 10 July 2023 11:16:09 PM

சாலைப்பணி நடக்கும் இடத்தில் இருந்து வெளியேறிய அரிய வகை வெள்ளைப்பாம்பு

பென்னாகரம்: வனப்பகுதிக்குள் சென்ற வெள்ளைப்பாம்பு... பென்னாகரம் அருகே சாலைப் பணி மேற்கொள்ளும் போது அருகில் இருந்த நீர் குட்டையில் இருந்து அரிய வகை வெள்ளை நிறப் பாம்பு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

பென்னாகரம் அருகே கரியம்பட்டி - முதுகம்பட்டி பகுதிகளுக்குச் செல்லக்கூடிய தார் சாலை பணி நடைபெற்று வருகிறது.

snake,rare species,workers,cell phone,social network ,பாம்பு, அரியவகை, பணியாளர்கள், செல்போன், சமூக வலைதளம்

இந்த நிலையில் நாய்க்கனேரி பகுதியில் சாலை சீரமைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, சாலையின் அருகே இருந்த நீர் குட்டையில் மிதந்து கொண்டிருந்த 8 அடி நீளம் கொண்ட அரிய வகை வெள்ளை நிற பாம்பு ஜேசிபி இயந்திரத்தின் அதிக இரைச்சல் மற்றும் மண் தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வுகளால் வெளியேறி சாலை அமைக்கும் இடங்களில் ஊர்ந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

சாலையில் ஊர்ந்து சென்ற அரிய நிறப் வெள்ளை நிறப் பாம்பை பணியாளர்கள் செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

Tags :
|