வருமானத்தை விட 579 சதவீதம் அதிகம் சொத்து குவித்த ஆ.ராசா
By: Nagaraj Wed, 12 Oct 2022 10:11:04 PM
சென்னை: வருமானத்திற்கு விட அதிக சொத்து குவிப்பு...முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் ஆ.ராசா.
அப்போது, புதுடெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ஆ.ராசா சாதகமாக செயல்பட்டதாகவும், அதில் பலன் பெற்ற அந்த நிறுவனம், ராசாவின் நண்பர்கள், உறவினர்கள் நடத்தும் நிறுவனம் மூலம் அவருக்கு லாபம் கொடுத்ததாகவும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
தொடர் விசாரணை நடத்திய சிபிஐ கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு
நீதிமன்றத்தில் ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆ.ராசா
தனது வருமானத்தை விட ரூ.5.53 கோடி அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், இது
தனது வருமானத்தை விட 579 சதவீதம் அதிகம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
2ஜி
அலைக்கற்றை வழக்கில் அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது
சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து ஆ.ராசா கடந்த 2017ம்
ஆண்டு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.