Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பரபரப்பை கிளப்பு டில்லி பிரமுகரின் அறிக்கை: தமிழகத்தில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி

பரபரப்பை கிளப்பு டில்லி பிரமுகரின் அறிக்கை: தமிழகத்தில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி

By: Nagaraj Sun, 08 Oct 2023 9:12:36 PM

பரபரப்பை கிளப்பு டில்லி பிரமுகரின் அறிக்கை: தமிழகத்தில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி

புதுடில்லி: மிகப்பெரிய திருப்பம் வர போகுதாம்... தமிழக அரசியலில் விரைவில் மிகப் பெரிய திருப்பம் வரும் என்கிறது புதுடில்லி அரசியல் வட்டாரம். அ.தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர் ஒருவர், காங்கிரஸ் மேலிடத்தில் ரகசிய பேச்சு நடத்தி வருகிறாராம்.

'ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடியும் வரை காத்திருங்கள்; நல்ல முடிவு வரும். ராகுல் தி.மு.க., கூட்டணியில் உறுதியாக இருந்தாலும், அவர் மனதை நாங்கள் மெதுவாக மாற்றி வருகிறோம்...' என, காங்கிரஸ் சீனியர், அ.தி.மு.க., பிரமுகரிடம் தெரிவித்துள்ளாராம்.

இதற்கிடையே, இன்னொருவரும் அ.தி.மு.க., - -காங்., கூட்டணி வர வேண்டும் என, கடுமையாக வேலை செய்துகொண்டிருக்கிறார்; அவர் காங்கிரசின் தேர்தல் வியூகத்தை தயாரித்தவர்.இவர் தான் காங்கிரசின் கர்நாடக வெற்றிக்கு காரணம். இவர், ஏற்கனவே அ.தி.மு.க.,வின் தேர்தல் வியூகத்தை வகுத்தவர். எனவே அ.தி.மு.க.,விற்கு நன்கு அறிமுகமானவர்.

aiadmk,alliance,congress,rahul,report,nature,dmk ,அதிமுக, கூட்டணி, காங்கிரஸ், ராகுல், அறிக்கை, இயற்கை, திமுக

இவர், தற்போது ராகுலுக்கு படு நெருக்கம். தமிழக அரசியல் களத்தை நன்கு அறிந்தவர்.இவர், சமீபத்தில் பழனிசாமிக்கு நெருக்கமான, அ.தி.மு.க., தலைவரை சந்தித்துள்ளார். தவிர, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கும், ராகுலுக்கும் ஒரு அறிக்கை அளித்துள்ளாராம். 'காங்கிரசும், அ.தி.மு.க.,வும் தேர்தலை பல முறை இணைந்து சந்தித்துள்ளன.

இது இயற்கையான கூட்டணி. மேலும், அ.தி.மு.க.,வுடன் இணைந்தால் அதிக தொகுதிகளைப் பெறலாம். தி.மு.க., மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்...' என, தன் அறிக்கையில் கூறியிருக்கிறாராம்.

Tags :
|
|
|
|