Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செந்தில்பாலாஜியின் உடல் நிலை குறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

செந்தில்பாலாஜியின் உடல் நிலை குறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

By: vaithegi Sat, 25 Nov 2023 08:13:50 AM

செந்தில்பாலாஜியின் உடல் நிலை குறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கில் கடந்த ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர். செந்தல் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு இடையே ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் உடல்நிலை மோசமாக இருப்பதால் சிறையில் இருந்து சிகிச்சை பெற முடியாது எனக் கோரியிருந்தார். இதற்கு செந்தில்பாலாஜியின் மருத்துவ அறிக்கையை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது,

filed,supreme court,senthilbalaji ,தாக்கல் , உச்ச நீதிமன்றம் ,செந்தில்பாலாஜி

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மூளைக்கான எம்.ஆர்.ஐ பரிசோதனையில் வலதுபுறத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் முதுகெலும்பில் வீக்கம் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது,

மேலும் அவருக்கு பித்தப்பை கற்கள் இருப்பதாகவும் நாளடைவில் உணவு உட்கொள்வதை அது குறைக்கும் என்றும் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் கால்சிய படிவு உள்ளதாகவும் அட்னாஹ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|