Advertisement

மீண்டும் வீரியம் காட்டும் கொரோனா தொற்று

By: vaithegi Sun, 20 Aug 2023 1:32:20 PM

மீண்டும் வீரியம் காட்டும் கொரோனா தொற்று

இந்தியா: தற்போது 37,395 பேர் மருத்துவமனையில் தீவிர மருத்துவ பிரிவில் அனுமதி ... உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பரவத் துவங்கிய கொரோனா தொற்று மூன்று அலைகளை தாண்டி தற்போது வரையிலும் ஒழிக்கப்படாமல் வீரியம் காட்டி கொண்டு வருகிறது.

ஆனால், இந்தியாவில் தற்போது ஓரளவுக்கு கொரோனா தொற்று கட்டுப்பாட்டிலிருந்து வந்தாலும் பல்வேறு உலக நாடுகளில் கொரோனா தொற்றுகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டபடி இருந்து கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வரையிலும் கொரோனா தொற்றினால் 69.08 லட்சம் உயிரிழந்து உள்ளதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

corona,world,hospital ,கொரோனா ,உலகம் ,மருத்துவமனை

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தொற்றால் 693,684,365 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 665,605,508 பேர் முறையான சிகிச்சை பெற்று குணமடைந்து இருக்கின்றனர். மேலும், தற்போது 37 ஆயிரத்து 395 பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிக்கையை வெளியிடப்பட்டிருக்கிறது.

இதை தொடர்ந்து, உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றும் உலக நாடுகளில் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags :
|
|