Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விரைவு ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்து காவலர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூடு

விரைவு ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்து காவலர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூடு

By: Nagaraj Mon, 31 July 2023 2:51:50 PM

விரைவு ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்து காவலர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூடு

மகாராஷ்டிரா: ஆர்பிஎப் காவலர் துப்பாக்கிச்சூடு... ஜெய்ப்பூர்-மும்பை விரைவு ரயிலில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.பி.எஃப். காவலர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில், 4 பேர் உயிரிழந்தனர்.

அந்த ரயில், இன்று அதிகாலை மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்தபோது, பி-5 பெட்டியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.பி.எஃப் காவலர் சேத்தன் சிங், தனது துப்பாக்கியை எடுத்து திடீரென சரமாரியாக சுட்டார்.

shooting,interrogation,train station,escape attempt,trapped ,துப்பாக்கிச்சூடு, விசாரணை, ரயில் நிலையம், தப்ப முயற்சி, சிக்கினார்

இதில், அவரது உயரதிகாரியான துணை உதவி ஆய்வாளர் டீகா ராம் மீனா மற்றும் பயணிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர் ரயில், தஹிசார் ரயில் நிலையம் வந்தபோது, அவர் கீழே குதித்து தப்ப முயன்றார். சக ரயில்வே போலீசார், சேத்தன்சிங்கை மடக்கிப் பிடித்து கைது செய்து, துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :