கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்... போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண்
By: Nagaraj Fri, 02 Dec 2022 11:23:11 AM
கேரளா: கேரளாவில் மது போதையில் இளம்பெண் ஓட்டிச் சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் குழந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்ணூர் அருகே மாகி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீசார் விசாரணையில் மதுபோதையில் வந்த பெண் வடக்கும்பாட்டைச் சேர்ந்த ரசீனா என்பது தெரிய வந்தது.
மேலும் அந்த பெண் அங்கு திரண்டிருந்த மக்களிடையே தகராறிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணை கைது செய்த போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் ஓட்டிச் சென்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
போதையில் கார் ஓட்டி இவ்வாறு இளம் பெண் விபத்தை ஏற்படுத்தியது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Tags :
accident |