Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெட்டா நிறுவனம் மேற்கொள்ளும் அதிர்ச்சி தரும் நடவடிக்கை

மெட்டா நிறுவனம் மேற்கொள்ளும் அதிர்ச்சி தரும் நடவடிக்கை

By: Nagaraj Sat, 08 Oct 2022 7:50:48 PM

மெட்டா நிறுவனம் மேற்கொள்ளும் அதிர்ச்சி தரும் நடவடிக்கை

நியூயார்க்: சைலண்டாக திட்டம்... மெட்டா நிறுவனம் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


மெட்டா நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் மேலும் அதிர்ச்சியாக இந்த நடவடிக்கையை 'குய்ட் லேஆப் 'அதாவது சத்தமில்லாமல் அமைதியான முறையில் பேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

meta company,employees,exiles,facebook,silent ,மெட்டா நிறுவனம், ஊழியர்கள், வெளியேற்றுகிறது, பேஸ்புக், சைலண்ட்

ஏற்கனவே இந்த நிதியாண்டில் புதிதாக வேலைக்கு ஊழியர்களை எடுப்பதை நிறுத்தி வைத்திருக்கின்ற மெட்டா நிறுவனம் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மெட்டா நிறுவனத்தின் விளம்பர வருவாய் தொடர்ந்து நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக முதற்கட்டமாக செயல்திறன் குறைவாக இருக்கும் ஊழியர்களை கண்டறிந்து அவர்களை பணிநீக்கம் செய்ய மார்கர் ஜூக்கர்பெர்க் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :
|