Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து நிலைய ஏற்பாடு

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து நிலைய ஏற்பாடு

By: vaithegi Thu, 12 Jan 2023 10:03:27 AM

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து நிலைய ஏற்பாடு


சென்னை: சிறப்பு பேருந்து நிலைய ஏற்பாடு .... பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து நிலைய ஏற்பாடு மற்றும் பேருந்து வழித்தடம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மாதவரம் புதிய பேருந்து நிலையம்: ஆந்திரா செல்லும் பேருந்துகள் ரெட்ஹில்ஸ் பொன்னேரி கும்முடிப்பூண்டி ஊத்துக்கோட்டை வழியாக செல்லும்.

கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையம்: பாண்டிச்சேரி கடலூர் சிதம்பரம் பேருந்துகள் கத்திப்பாரா பாலம் எஸ்.வி.படேல் ரோடு, கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்லும்.

தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையம்: திண்டிவனம் விக்கிரவாண்டி பண்ருட்டி கும்பகோணம் தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.

special bus stand,chennai ,சிறப்பு பேருந்து நிலையம்,சென்னை


தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையம்: திண்டிவனம் வழியாக :- திருவண்ணாமலை, போளுர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.

பூந்தமல்லி பேருந்து நிலையம்: வேலூர், ஆரணி, ஆற்காடு திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.

மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம் (CMBT): மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களுர் செல்லும் பேருந்துகள்.

எனவே அனைத்து பயணிகளும் மேற்கண்ட ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு, அனைத்து சாலைகளிலும் சீரான போக்குவரத்துக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு போக்குவரத்து துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Tags :