விடுதியின் 7வது மாடியில் இருந்து திடீரென விழுந்து இறந்த மாணவன்
By: Nagaraj Tue, 14 Feb 2023 10:02:06 PM
மும்பை: மும்பை பவாய் ஐஐடியில் பி.டெக். அகமதாபாத் முதலாம் ஆண்டு மாணவர் தர்ஷன் சோலங்கி விடுதியின் 7வது மாடியில் இருந்து திடீரென விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தற்கொலை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மாணவன் எழுதிய குறிப்பு எதுவும் கிடைக்காததால், விபத்து மரணம் பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
எனினும் இது தற்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்வி அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
கல்லூரி வளாகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீது சாதி பாகுபாடு காட்டப்படுவதாகவும், இதனால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்த அந்த மாணவரின் முதல் செமஸ்டர் தேர்வு சனிக்கிழமை முடிவடைந்த நிலையில் அவர் இறந்திருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.