Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கார்டுதாரர்களுக்கான சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியீடு

ரேஷன் கார்டுதாரர்களுக்கான சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியீடு

By: vaithegi Mon, 04 Sept 2023 1:23:59 PM

ரேஷன் கார்டுதாரர்களுக்கான சூப்பர் அறிவிப்பு  ஒன்று வெளியீடு

உத்தரப் பிரதேசம் : ரேஷன் கார்டுதாரர்களுக்கு இனி ஒரே மாதத்தில் 2 மாதத்திற்குரிய ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேசமாநில அரசு புதிய அறிவிப்பு ..இந்தியாவில் ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

இந்த நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது, பொதுமக்கள் இனி ஒரே மாதத்தில் 2 மாதத்திற்குரிய ரேஷன் பொருட்களை பெற்று பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ration card holder,uttar pradesh ,ரேஷன் கார்டுதாரர்,உத்தரப் பிரதேசம்

மேலும், உத்தரப் பிரதேச மாநில அரசு ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்றவும் அதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு, அனைத்து ரேஷன் கடைகளும் பொது சேவை மையங்களாக மாற்றப்பட்ட பின் ரேஷன் கார்டுதாரங்கள் 2 மாதத்திற்குரிய ரேஷன் பொருட்களை ஒரே நேரத்தில் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இப்பொது சேவை மையத்தின் மூலமாக ஆதார் அட்டை புதுப்பிப்பது, பான் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்ற வசதியினையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இப்பொது சேவை மையங்களில் அரசு ஊழியர்களை பணியமர்த்தவும் அரசு திட்டமிட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

Tags :