Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிலிப்பைன்சில் அப்ரா மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் அப்ரா மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம்

By: vaithegi Wed, 27 July 2022 09:27:37 AM

பிலிப்பைன்சில் அப்ரா மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம்

மணிலா: பிலிப்பைன்சின் அப்ரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது.

இதை அடுத்து இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பெரும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

earthquake,philippines ,நிலநடுக்கம் ,அப்ரா

மேலும் இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

முன்பு பிலிப்பைன்சில் 1990-ம் ஆண்டு 7.7 என பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :