Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்

இலங்கை மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்

By: Nagaraj Wed, 10 May 2023 9:20:49 PM

இலங்கை மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்

கொழும்பு: பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்... 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

6.3 மில்லியன் மக்கள் 2022 ஆம் ஆண்டில் உணவு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையால் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தனர் என கூறியுள்ளது.

1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் 2022 இல் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.

report,food insecurity,political crisis,inflation,public debt ,அறிக்கை, உணவு பாதுகாப்பின்மை, அரசியல் நெருக்கடி, பணவீக்கம், பொதுக்கடன்

தொடர்ச்சியான வறட்சி, வெளிநாட்டு கையிருப்பு, அரசியல் நெருக்கடி, உயர் பணவீக்கம் மற்றும் பொதுக் கடன் போன்ற பல காரணிகள் நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

2019 ஆம் ஆண்டில் உணவுப் பாதுகாப்பின்மை 10 சதவீதமாக இருந்த ஒரு நாட்டிற்கு இது தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

Tags :
|