- வீடு›
- செய்திகள்›
- இந்தியாவில் இதுவரை மொத்தம் 195 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
இந்தியாவில் இதுவரை மொத்தம் 195 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
By: vaithegi Sat, 11 June 2022 10:56:13 PM
நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
கடந்த ஆண்டு ஜூனிலிருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. அதனால் பல கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்தியாவில் மொத்தம் 195 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரவு 7 மணி வரையில் சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Tags :