வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஓரு எச்சரிக்கை
By: vaithegi Thu, 11 May 2023 3:13:51 PM
இந்தியா: வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தும் நபர்களுக்கு சைபர் கிரைம் நிபுணர்கள் சார்பாக புதிய எச்சரிக்கை .... தற்போது உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் செயலியில் வாட்ஸ்அப் செயலி 3- வது இடத்தில் உள்ளது.
செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு எத்தனை விதமான புது செயலிகள் வந்தாலும் வாட்ஸ்அப் தனி சிறப்பிடத்தை பெற்று உள்ளது. இதனால் அதிக அளவிலான மோசடி செயல்களுக்கான முயற்சிகளும் வாட்ஸ்அப்பில் உலா வருகிறது.
அந்தவகையில், தற்போது +254,+84,+63,+1(218) போன்ற எண்களில் தொடங்கும் தொலைபேசி நம்பர்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் கால்கள் மற்றும் செய்திகளை பயனர்கள் ஏற்க வேண்டாம்.
மேலும் இது தொடர்பாக உடனடியாக புகார் அளிக்க வேண்டும் எனவும், இதன் மூலம் பயனர்களின் பண பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் திருடப்படுவதாகவும் சைபர் கிரைம் நிபுணர்கள் மக்களை எச்சரித்து உள்ளனர்.