ஆதாரின் விவரங்களை புதுப்பிக்க ஒரு அருமையான வாய்ப்பு .. அடுத்த 3 மாதங்களுக்கு இலவசம்
By: vaithegi Thu, 16 Mar 2023 12:12:29 PM
சென்னை: ஆதார் அட்டை விவரங்களை இணையதளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவிப்பு ... தற்போது அனைத்து சேவைகளை பெற ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அத்துடன் அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு வாயிலாக செயற்படுத்தப்பட்டு வருகிறது.
அதனால் இதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் அனைத்தும் மற்ற ஆவணங்களில் இடம்பெற்றுள்ள விவரங்களை ஒத்து இருக்க வேண்டும். இதில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அதனை கட்டாயமான முறையில் மாற்ற வேண்டும்.
நீங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்காமல் வைத்திருக்கிறீர்கள் எனில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். இதனை அடுத்து தற்போது மத்திய அரசு ஆதார் அட்டை விவரங்களை அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. ஆனால் ஆன்லைன் முறையில் மட்டுமே இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் அத்துடன் ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுப்பித்தால் வழக்கம் போல் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். மேலும் இலவச சேவையை myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த இணையதளத்தில் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.