155 முறை போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞர் வசமாக போலீசாரிடம் சிக்கினார்
By: Nagaraj Fri, 10 Nov 2023 4:58:54 PM
கேரளா: சாலை விதிகளை மீறியதற்காக 155 அபராதம் நிலுவையில் இருக்கும் வாலிபர் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.
கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கண்ணூர் மாவட்டம் மட்டூல் பகுதியில் இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் 2 பேரை ஏற்றிச் சென்றது செயற்கை நுண்ணறிவு கேமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதே இளைஞர் ஏற்கனவே பலமுறை சட்டத்தை மீறியிருப்பது தெரிய வந்துள்ளது.
Tags :
police |