Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனாதிபதியாக இருந்தாலும் என்றும் எளிமை மாறாத அப்துல் கலாம்

ஜனாதிபதியாக இருந்தாலும் என்றும் எளிமை மாறாத அப்துல் கலாம்

By: Nagaraj Thu, 27 July 2023 2:38:51 PM

ஜனாதிபதியாக இருந்தாலும் என்றும்  எளிமை மாறாத அப்துல் கலாம்

சென்னை: ஜனாதிபதி என்ற உயர் பதவியில் இருந்தும் கூட சாதாரணமாகவும், இயல்பாகவும் நேசப்பூர்வமாகவும் மாணவர்களோடும், குழந்தைகளோடும் உரையாடிய உயர்ந்த உள்ளம் உடையவர் டாக்டர் கலாம்.

உடம்பில் ஓடும் ஒவ்வொரு ரத்தத் துளியிலும் தேசபக்த உணர்வை இழைத்து கொண்டு மக்கள் ஜனாதிபதியாக மலர்ந்தவர் டாக்டர் கலாம்.

simplicity,people president,high office,people,great wealth ,எளிமை, மக்கள் ஜனாதிபதி, உயர் பதவி, மக்கள், மாபெரும் சொத்து

இளைஞர்களும், மாணவர்களும் தடுமாறி விழும்போதெல்லாம் அவர்களை தன் பொன்மொழிகளால் இன்றுவரை தாங்கி பிடித்து வரச் செய்பவர் டாக்டர் கலாம்.

குழந்தைகளுக்கு நேருவாகவும், பெரியவர்களுக்கு நவீன காந்தியாகவும் திகழ்ந்தவர் டாக்டர் கலாம். இப்படிப்பட்ட மகான்மேல் ஒரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை ஒரு துரும்பளவுகூட ஒருவரும் எக்காலமும் சுமத்த முடியாது. ஏனெனில் இவர் அரசியல்வாதி இல்லை! மக்களின் ஜனாதிபதி. இந்தியாவின் மாபெரும் சொத்து.

Tags :
|