Advertisement

புயல் மழையால் சுமார் 10,000 ஹெக்டேர் பயிர்கள் நாசம்

By: Monisha Fri, 27 Nov 2020 3:35:58 PM

புயல் மழையால் சுமார் 10,000 ஹெக்டேர் பயிர்கள் நாசம்

நிவர் புயல் நேற்று அதிகாலை கரையை கடந்தது. புயல் கரையை கடப்பதற்கு முன்பும், கரையை கடந்த பின்னரும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் இதர பயிர்கள், மழைநீரில் மூழ்கின. இதைத்தொடர்ந்து பயிர் சேதங்களை வேளாண்துறை அதிகாரிகள் நேற்று கணக்கிட்டனர்.

அதன்படி மொத்தம் 9,468 ஹெக்டேரில் நெற்பயிர் உள்ளிட்ட விவசாய பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:- நெற்பயிரை பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 750 ஹெக்டேர், செங்கல்பட்டு 2,760, ராணிப்பேட்டை 205, திருவண்ணாமலை 526, விழுப்புரம் 1,032, கடலூர் 1,134, திருவள்ளூர் 2,063 என மொத்தம் 8,470 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சேதம் அடைந்தன.

storm,rain,crops,damage,loss ,புயல்,மழை,பயிர்கள்,சேதம்,நஷ்டம்

மேற்கண்ட மாவட்டங்களில் 428 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களும், 908 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த இதர பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளன. மொத்தம் 9,468 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் உள்ளிட்ட விவசாய பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிவர் புயல் மற்றும் மழையால் தோட்டக்கலை பயிர்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கணக்கிட்டனர். அதில் வேலூர், கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 382 கிராமங்களில் 1,334 விவசாயிகள், 914 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த வாழை, மரவள்ளிக்கிழங்கு, தர்பூசணி, பப்பாளி, காய்கறிகள் ஆகிய பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

Tags :
|
|
|
|