Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் இதுவரை சுமார் 6 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்து விட்டதாக தகவல்

அமெரிக்காவில் இதுவரை சுமார் 6 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்து விட்டதாக தகவல்

By: Karunakaran Tue, 27 Oct 2020 11:58:44 AM

அமெரிக்காவில் இதுவரை சுமார் 6 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்து விட்டதாக தகவல்

அமெரிக்காவில் வருகிற 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகின்றார். மேலும் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் காண்கிறார். கொரோனா பரவலுக்கு மத்தியில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரமும் தீவிரமாக நடைபெற்றது. மேலும் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான நேருக்கு நேர் விவாதமும் காரசாரமாக நிகழ்ந்தது. அமெரிக்காவை பொறுத்தவரையில் தேர்தல் தேதிக்கு முன்பாகவே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வசதி உள்ளது. இதனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களித்து விடுவது வழக்கம்.

60 million people,united states,vote,president election ,60 மில்லியன் மக்கள், அமெரிக்கா, வாக்கு, ஜனாதிபதி தேர்தல்

தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் தேர்தல் நடைபெறவுள்ளதால், கொரோனா பரவல் மற்றும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் பொருட்டு, தேர்தலுக்கு முன்னதாகவே அஞ்சல் மூலமாகவும் மற்றும் வாக்குச்சாவடிக்கு சென்றும் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு சரியாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இதுவரை சுமார் 6 கோடி (5 கோடியே 87 லட்சம்) பேர் முன்கூட்டியே வாக்களித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் குறித்து ஆர்வம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|