காருக்குள் ஏறி விளையாடிய போது விபரீதம்; கதவுகள் பூட்டியதால் 2 சிறுவர்கள் பலி
By: Nagaraj Tue, 16 June 2020 4:02:43 PM
சிறுவர்கள் பரிதாப பலி... பூட்டிய காரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இரண்டு பேர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முந்தா பண்டே பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் நான்கு பேர் காலை நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே இருந்த காரில் ஏறி கதவை பூட்டி விட்டு உள்ளே விளையாடியுள்ளனர். பின்னர் அவர்களால் கதவை திறக்க முடியாமல் போயுள்ளது. அப்போது அருகில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது, இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவர்கள் மயக்கமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுவர்களை நீண்ட நேரமாக காணாததால், சந்தேகமடைந்த பெற்றோர்
தேடியுள்ளனர். காரில் மயக்க நிலையில் சிறுவர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி
அடைந்தனர். தொடர்ந்து போலீசார் வந்து சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அதில் சிறுவர்கள் 2 பேரும் ஏற்கெனவே
உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற இருவருக்கும்
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுவர்கள் நால்வரும் 4-7
வயதுக்குட்பட்டவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்
தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விளையாடிக்
கொண்டிருக்கையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பரிதாபமாக
உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.