Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்மாற்றிகள் கொள்முதலில் எவ்வித முறைகேடுகளும் மின்வாரியத்தில் நடைபெறவில்லை ..மின்சார வாரியம் தெரிவிப்பு

மின்மாற்றிகள் கொள்முதலில் எவ்வித முறைகேடுகளும் மின்வாரியத்தில் நடைபெறவில்லை ..மின்சார வாரியம் தெரிவிப்பு

By: vaithegi Sun, 09 July 2023 11:31:04 AM

மின்மாற்றிகள் கொள்முதலில் எவ்வித முறைகேடுகளும் மின்வாரியத்தில்  நடைபெறவில்லை ..மின்சார வாரியம் தெரிவிப்பு

சென்னை: மின்மாற்றிகள் கொள்முதல், மின்வாரியம் விளக்கம் .... மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில் மின்வாரியம் அதற்கு விளக்கமளித்து உள்ளது. மின்மாற்றிகள் கொள்முதலில் எவ்வித முறைகேடுகளும் மின்வாரியத்தில் நடைபெறவில்லை எனவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து எந்நிலையிலும் முறைகேடுகள் நடைபெறுவதை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது. மின்மாற்றிகளை கொண்டு செல்வதற்கான செலவையும் கொள்முதல் விலையுடன் சேர்த்து குறிப்பிடப்படுகிறது எனவும், மின்வாரிய Cost Data-வில் உள்ள விலை ஒப்பந்தபுள்ளி நிர்ணயம் செய்யும் காலத்திற்கு ஏற்ப திருத்தம் இல்லை எனவும் கூறி உள்ளது.

electricity board,transformers ,மின்சார வாரியம் ,மின்மாற்றிகள்


தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தில் மின்மாற்றிகள் 5 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்படுவதாகவும், புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ள கேரளா, ராஜஸ்தானில் 3 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்து உள்ளது.

மேலும் கோப்புகளை பரிசீலித்ததில் நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்பித்துள்ளது தெரியவந்துள்ளதாகவும், நிறுவனங்கள் தந்த விலைப்புள்ளியை காட்டிலும் ரூ.50,000 வரை குறைப்பு செய்துதான் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளது.

Tags :