Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகளே இல்லை .. சுகாதாரத்துறை தகவல்

இந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகளே இல்லை .. சுகாதாரத்துறை தகவல்

By: vaithegi Thu, 25 May 2023 1:55:44 PM

இந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகளே இல்லை  ..  சுகாதாரத்துறை தகவல்

சென்னை: 14 மாவட்டங்களில் பாதிப்புகள் இல்லை என்ற மகிழ்ச்சியான செய்தி ..... தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது.இதயத்து திடீரென உயர்ந்த பாதிப்புகளால் மக்கள் மிகவும் அச்சமடைந்தனர். இந்நிலையில் மீண்டும் தடுப்பு பணிகள் வேகப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து இதன் விளைவாக படிப்படியாக பாதிப்பின் தீவிரம் குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழகம் வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

department of health,corona ,சுகாதாரத்துறை ,கொரோனா

எனவே முன்னெச்சரிக்கையாக பரிசோதனை மேற்கொண்டதில் சென்னை மற்றும் கோவையில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் உ வெளியிட்டுள்ளது. சென்னையில் மட்டும் 417 பேர் சிகிச்சையில் இருந்து கொண்டு வருகின்றனர்.

மேலும் மதுரை, ராமநாதபுரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தேனி, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, அரியலூர், திருப்பத்தூர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகளே இல்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளது.




Tags :