கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு .. வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு
By: vaithegi Mon, 09 Jan 2023 3:02:13 PM
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மற்றும்
அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 9-ம் தேதி இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது
இதனை அடுத்து ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என அறிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.