Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிகாரிகளை அவமதித்ததாக குற்றச்சாட்டு... மேயருக்கு சிறை

அதிகாரிகளை அவமதித்ததாக குற்றச்சாட்டு... மேயருக்கு சிறை

By: Nagaraj Thu, 15 Dec 2022 11:47:30 AM

அதிகாரிகளை அவமதித்ததாக குற்றச்சாட்டு... மேயருக்கு சிறை

இஸ்தான்புல்: அதிகாரிகளை அவமதித்ததற்காக இஸ்தான்புல் நகர மேயருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் துருக்கி அதிபர் எர்டோகனின் போட்டியாளராகக் கருதப்படும் எக்ரெம் இமாமோக்லு போட்டியிட இருந்த நிலையில் நீதிமன்றம் அரசியல் தடை விதித்துள்ளது.

officers,mayor,imprisonment,parliamentary elections,judgment ,அதிகாரிகள், மேயர், சிறைதண்டனை, நாடாளுமன்ற தேர்தல், தீர்ப்பு

பிரதான எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த பிரபலமான இமாமோக்லு, அதிபர் எர்டோகனின் முக்கிய போட்டியாளராகப் பார்க்கப்படுகிறார்.

அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சுமார் ஆறு மாதங்கள் உள்ள நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|