அதிரடி நடவடிக்கை... டெல்லியில் 43 பேர் கைது
By: Nagaraj Mon, 15 May 2023 5:47:52 PM
புதுடில்லி: 43 பேர் கைது... டெல்லியில் போதைப் பொருளுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையில், 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிகப் பெரிய அளவில் சரஸ், ஹெராயின், கொகைய்ன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைத் தடுப்புப் பிரிவினர், டெல்லி சிறப்புக் குற்றப்பிரிவு காவல்துறையினர் இணைந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டோரை கண்காணித்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தேச விரோத போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை கூண்டோடு ஒழிப்பதற்காக ஆயிரம் போலீஸார் கொண்ட சிறப்புப்படை அமைக்கப்பட்டதாகக் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆபரேசன் காவச் என்ற இந்த நடவடிக்கையின் கீழ் சுமார் 80 கிலோ போதைப் பொருள்கள், மற்றும் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tags :
drugs |
arrest |