சீனா நடந்து கொள்வதை பொறுத்தே நடவடிக்கை; ஜோபிடின் கருத்து
By: Nagaraj Sat, 21 Nov 2020 4:27:18 PM
சீனா குறித்து ஜோபிடன் கருத்து.. சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க தான் விரும்புகிறேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
தனது சொந்த ஊரான டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் நகரில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது:
“சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன். இதன் நோக்கம் சீனாவை தண்டிக்க வேண்டும் என்பது அல்ல. சர்வதேச சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை சீனா புரிந்து கொள்வதை உறுதி செய்வது ஆகும். இது ஒரு எளிய முன்மொழிவு ஆகும்.
அதேபோல் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைவது உறுதி. நான்
ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முதல் நாளில் மீண்டும் உலக சுகாதார அமைப்பில் சேர
போகிறோம். அதேசமயம் அதில் சில சீர்திருத்தங்களும், ஒப்புதல்களும்
தேவைப்படுகிறது. அதேபோல் பரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலும் அமெரிக்கா மீண்டும்
இணையும்” என கூறினார்.
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியான ஜோ பிடன், எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதியாக பதவியேற்பார்.