Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உள்ளூராட்சி சபை தேர்தல் அச்சுப்பணிகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை

உள்ளூராட்சி சபை தேர்தல் அச்சுப்பணிகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை

By: Nagaraj Fri, 14 Apr 2023 08:19:37 AM

உள்ளூராட்சி சபை தேர்தல் அச்சுப்பணிகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை

கொழும்பு: அரசாங்க அச்சகம் நடவடிக்கை... உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் தொடர்பான ஏனைய அச்சடிப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்டுள்ளன.

government press,payment,proceedings,stopping,printing ,அரசாங்க அச்சகம், கொடுப்பனவு, நடவடிக்கை, நிறுத்தம், அச்சிடல்

இந்த நடவடிக்கைகளுக்காக ஐந்து கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், திறைசேரியினால் அதற்கான பணம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக 200 இற்கும் மேற்பட்ட அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இது தொடர்பில் திறைசேரிக்கு மீண்டும் நினைவூட்டல் விடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Tags :