ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் 2வது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கை
By: Nagaraj Mon, 24 Aug 2020 7:38:17 PM
கொரோனா 2வது அலை... ஆஸ்திரேலியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஆஸ்திரேலியாவில் அண்மைக் காலமாக கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அந்த நோயின் இரண்டாவது அலையைத் தடுப்பதற்கான முயற்சியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்று
பாதிப்பால் 17 போ் உயிரிழந்தனா். இந்த உயிரிழப்பு அனைத்தும் நாட்டில்
கரோனா பரவலின் மையப்புள்ளியாகத் திகழும் விக்டோரியா மாகாணத்தில்
நேரிட்டுள்ளது.
எனினும், அந்த மாகாணத்தின் தினசரி கரோனா பலி
எண்ணிக்கை குறைந்து வருகிறது.இரண்டாவது கரோனா அலை காரணமாக ஆஸ்திரேலியாவில்
ஏற்பட்ட உயிரிழப்புகளில் 80 சதவீதம், விக்டோரியா மாகாணத்தில்தான்
நேரிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.