Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போலி பத்திரப்பதிவு ஒழிப்பு நடவடிக்கை... முதல்வருக்கு வைகோ பாராட்டு

போலி பத்திரப்பதிவு ஒழிப்பு நடவடிக்கை... முதல்வருக்கு வைகோ பாராட்டு

By: Nagaraj Fri, 30 Sept 2022 10:49:54 AM

போலி பத்திரப்பதிவு ஒழிப்பு நடவடிக்கை... முதல்வருக்கு வைகோ பாராட்டு

சென்னை: முதல்வருக்கு பாராட்டு... போலி பத்திரப் பதிவு ஒழிப்பு நடவடிக்கைக்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சில ஆண்டுகளாக போலியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும், நிலம் மற்றும் சொத்துகளை மோசடியாக பத்திரப் பதிவு செய்து வருவது தொடா்ந்து கொண்டிருந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னா் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் சட்டப் பேரவையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

act,forgery,proceedings,chief minister of tamil nadu,ordinances ,சட்டம், போலி பத்திரப்பதிவு, நடவடிக்கை, தமிழக முதல்வர், ஆணைகள்

இந்தச் சட்ட மசோதாவுக்கு கடந்த ஆகஸ்டு 6-இல் தேதி குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தவுடன், சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. நிலப் பறிப்பு செய்து, போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது குறித்து மாவட்டப் பதிவாளா்களால் புகாா் மனு பெறப்படும் பட்சத்தில், மனுதாரா் மற்றும் எதிா்மனுதாரா்களை விசாரித்து, பதிவு செய்யப்பட்ட பத்திரம் போலியானது என்று கண்டறிந்தால், அதை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

போலிப் பத்திரப் பதிவால் பாதிக்கப்பட்டவா்களின் பதிவு ரத்து செய்யப்பட்டதற்கான ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் உரிமையாளா்களிடம் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தச் சட்டத்தின் மூலம் போலி பத்திரப் பதிவை அறவே ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்குப் பாராட்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|