Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை... மணிப்பூர் முதல்வர் தகவல்

சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை... மணிப்பூர் முதல்வர் தகவல்

By: Nagaraj Sun, 19 Mar 2023 10:56:42 PM

சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை... மணிப்பூர் முதல்வர் தகவல்

மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மணிப்பூர் முதல்வர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து, அவர்களை நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆலோசித்து வருவதாக பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

chief minister,action,myanmar,manipur,illegality ,முதலமைச்சர், நடவடிக்கை, மியான்மர், மணிப்பூர், சட்டவிரோதம்

மாநிலத்தில் உள்நுழைவு அனுமதி முறை நடைமுறையில் இருக்கும் நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த வேண்டுமென பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறிய மியான்மர் நாட்டினரை நாடு கடத்தவும், அரசு பதிவுகளில் அவர்களது பெயர் இருந்தால் நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென முதலமைச்சர் பிரேன்சிங் தெரிவித்துள்ளார்.

Tags :
|