Advertisement

சிறையில் உள்ள 46 குழந்தைகளை விடுவிக்க நடவடிக்கை

By: Nagaraj Sun, 23 Aug 2020 11:42:43 AM

சிறையில் உள்ள 46 குழந்தைகளை விடுவிக்க நடவடிக்கை

46 குழந்தைகளை விடுவிக்க நடவடிக்கை... பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து சிறையில் உள்ள 46 குழந்தைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

5 வயதிற்கு உட்பட்ட 46 குழந்தைகள் தற்போது நாடு முழுவதும் உள்ள சிறைகளில் தங்கள் தாய்மார்களின் பராமரிப்பில் உள்ளனர் என்று பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்மார்களின் பராமரிப்பில் உள்ள சிறு குழந்தைகளே, சிறைக்கு வெளியே பராமரிக்கப்படவுள்ளனர்.

department of prisons,children,prime minister,instruction ,சிறைச்சாலைத்துறை, குழந்தைகள், பிரதமர், அறிவுறுத்தல்

சிறைச்சாலை சீர்திருத்தங்களுக்கான இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இது குறித்து தெரிவிக்கையில், குழந்தைகளை விடுவிப்பதற்கான செயல்முறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் சிறைச்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

Tags :